புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: 5 மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும்

சென்னை: தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் இன்று அல்லது நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 20 மற்றும் 21ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

இருப்பினும் 5 மாவட்டங்களில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் இன்று அல்லது நாளை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, இன்று முதல் 19ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும். 20 மற்றும் 21ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், வட தமிழக மாவட்டங்களில் இன்று முதல் 20ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் கடும் பனி மூட்டம் காணப்படும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் காணப்படும். 17ம் தேதியிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது.

Related Stories: