சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட ‘எல்’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்தார் பட்டேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு வாகனங்கள் சிரமமின்றி செல்லும் வகையில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. எல்” வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயணம் செய்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றான மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எல் வடிவ பாலத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.60 கோடி செலவில் சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக ஆளுநர் மாளிகையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் சாலை உள்ளது. கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
அதேபோல, வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இந்த பகுதி எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக இருக்கும். பீக் நேரத்தில் சிக்னல்களை தாண்டுவதற்கு மட்டுமே மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியிருக்கும். வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்வதற்குள் சிக்னல்கள் இரண்டு முறை மூன்று வரை விழுந்து விடும்.
அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யபட்டது. சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் தற்போது முடிவு பெற்றுள்ளதால் இன்று சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பாலம் திறக்கப்படுவதால், ஐஐடி மெட்ராஸ் – அடையார் புற்று நோய் மருத்துவமனை வரையில் உள்ள சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.
