நான் முதல்வன் திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தி, தொழில் துறைக்கு தேவையான திறன்களுடன் அவர்களை உலகளவில் முதன்மையாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது தான் ‘நான் முதல்வன் திட்டம்’.

செஞ்சாரு: நான் முதல்வன் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறாமல் இருந்தாலும் முதல்வரின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப திறன் பயிற்சி அளிக்கப்படுவதே இதன் இலக்காகும். மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா அனலிட்டிக்ஸ் , கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, மற்றும் பைதான் புரோகிராமிங்.

ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், எலக்ட்ரிக் வாகனப் பராமரிப்பு, 3டி பிரிண்டிங் மற்றும் பிஐஎம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அட்வான்ஸ்டு டேலி, பேங்கிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகம், ஆங்கில வழித் தொடர்புப் பயிற்சி, மற்றும் வெளிநாட்டு மொழிகள் கற்கும் வசதி, நேர்காணல் திறன்: நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் ஆளுமை மேம்பாடு, டிஜிட்டல் அறிவு, அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அலுவலக மேலாண்மை மென்பொருள் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒன்றிய அரசு பணிகளுக்கான எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி போன்ற பணிகளில் சேருவதற்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க தனிப் பிரிவு செயல்படுகிறது. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இத்திட்டம் அகில இந்திய அளவில் பாராட்டை பெற்றுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய அரசு பணி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தமிழ்நாட்டு மாணவர்கள் உலக தரம் வாய்ந்தவர்கள் என்பதை காட்டும் வகையில் பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குத் தமிழக மாணவர்களை நேரடிப் பயிற்சிக்காக தமிழக அரசால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இத்திட்டம் வெறும் வேலைவாய்ப்பிற்கானது மட்டுமல்ல; மாணவர்களை உலகத் தரம் வாய்ந்த வல்லுநர்களாக மாற்றும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டது என கல்வியாளர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

41.38 லட்சம் பேர் பயன்
* இத்திட்டத்தின் கீழ் 2026-ன் தொடக்க நிலவரப்படி 41.38 லட்சம் மாணவர்கள் மற்றும் 1 லட்சம் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
* இத்திட்டத்தின் மூலம் உரிய திறன் பயிற்சி பெற்று 3.28 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
* கல்லூரி கனவு’ திட்டத்தின் மூலம் 1.87 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.

ஆண்டுவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
ஆண்டு நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம்
2022-23 ரூ.200 கோடி திட்டத் தொடக்கம் மற்றும் முதற்கட்ட பயிற்சிகள்
2023-24 ரூ.50 கோடி யுபிஎஸ்சி மற்றும் இதர போட்டித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டங்கள் அறிமுகம்.
2024-25 ரூ.206 கோடி 100 புதிய திறன் ஆய்வகங்கள் அமைக்க ; வங்கி
/ரயில்வே தேர்வுகள் பயிற்சி
2025-26 ரூ.200 கோடி நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.150 கோடி; ‘கல்லூரி கனவு’ வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ரூ.50 கோடி

Related Stories: