மகாராஷ்டிராவில் விளைச்சல் அமோகம் வெங்காய வரத்து அதிகரிப்பு

 

திருப்பூர், பிப்.10: திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறி, பழம், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக தினந்தோறும் லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு அதிக அளவு கொண்டு வரப்படுகிறது.

நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 டன் வரையிலான வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய நிலையில் இறக்கி வைப்பதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால் வெங்காய மண்டிகளில் இட வசதி ஏற்படும் வரை தென்னம்பாளையம் ஏபிடி சாலையில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றது. கடந்த 3 தினங்களாக வெயில் அதிகளவு இருப்பதன் காரணமாக வெங்காயம் காய்வதற்காக லாரிகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: