ஈரோடு :ஈரோட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவமனை ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறுமியை அழைத்துச் சென்று மிரட்டி தருண்குமார் என்பவர் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் தருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
