மும்பை : சுகாதாரமான நாக்பூர் என்பது காகிதத்தில் மட்டும்தான் உள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாக்பூரில் தெருக்களில் குப்பைகள் குறித்து நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து மும்பை உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது. சுகாதாரமான நாக்பூர், அழகான நாக்பூர் என்பது வெறும் முழக்கமாக காகிதத்தில் மட்டுமே உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
