சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், கனிமவளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி 2018-ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நீர், நிலம், காற்று மாசு ஏற்படுத்துவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018-ல் அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையை பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடந்த ஜனவரி 9-ம் தேதி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்த நிலையில் ஜனவரி 27-ல் அரசு நிராகரித்தது. தமிழ்நாடு அரசு நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, மூடப்பட்ட தொழிற்சாலை மாசடைந்த பகுதியில் உள்ளது. மாசடைந்த பகுதியில் உள்ளதால் பசுமை தாமிர ஆலை என்ற பெயரில் மீண்டும் திறக்க ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், கனிமவளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
