ஷில்லாங் : மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 25 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர். கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் செயல்பட்ட சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் பிப்.5ல் விபத்து ஏற்பட்டது.
