குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிப்பு

 

அகமதாபாத் :குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் உற்பத்தி செய்து வந்த ஆலை கண்டறியப்பட்டு 5 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிராந்திஜ் தாலுகாவில் உள்ள ஸ்ரீ சத்யா டெய்ரி நிறுவனத்தில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் பால் தயாரிக்க யூரியா, சோப்பு பவுடர், சோயாபீன் ஆயில் உள்ளிட்டவை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. 300 லிட்டர் பாலில் ரசாயன பொருட்களை கலந்து 1,800 லிட்டர் வரை கலப்பட பால் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் கலப்பட பால் அடைக்கப்பட்டு கிராமங்களில் மக்களுக்கு விற்பனை செய்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கலப்பட பால் ஆலை உரிமையாளர் ராகேஷ் தலைமறைவான நிலையில் ஊழியர்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: