பாலமேடு ஜல்லிக்கட்டு : முதல் சுற்று முடிவில் 6 காளைகளை பிடித்து சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்!!

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல்சுற்று நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்று முடிவில் சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். முதலாவது சுற்றின் முடிவில் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் 4 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 110 காளைகள் களம் கண்டது. இதில் 20 மாடுகள் பிடிபட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் ஒருவர் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: