வாரவிடுமுறை நாளையொட்டி ஏலகிரிமலையில் குடும்பத்தோடு திரண்ட சுற்றுலா பயணிகள்

ஏலகிரி: வாரவிடுமுறை நாளையொட்டி ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு திரண்டனர். அவர்கள் படகு இல்லத்தில் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து பொழுது பொக்குகின்றனர். இம்மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

ஒவ்வொன்றுக்கும் தமிழ்புலவர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுத்தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறை நாளான நேற்று ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்தனர். அவர்கள் அரசு படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள இயற்கை பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கினர். தொடர்ந்து தனியார் சுற்றுலா தளங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனிடையே இங்குள்ள இயற்கை பூங்கா, திறந்தவெளி திரையரங்கையும் சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: