சேகாம்பாளையத்தில் வழி தவறி தோட்டங்களில் சுற்றித்திரிந்த மான்

 

பல்லடம், ஜன.6: பல்லடம் அருகே சேகாம்பாளையத்தில் வழி தவறி வந்த ஒரு மான் அப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் விவசாய தோட்டங்களில் சுற்றித்திரிந்து வருகிறது.
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் இருந்து அருள்புரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓடை ஓரம், காட்டுப்பகுதியில் இருந்து மான் கூட்டத்தில் இருந்து பிரிந்து வழி தவறி வந்த ஒரு மான், விவசாய தோட்டங்களில் புகுந்து சுற்றி திரிந்தது.
அவ்வழியாக சென்ற பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ் இது பற்றி திருப்பூர் வனத்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் மானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories: