சென்னை: மாணவ – மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகப்பெரிய சந்தோஷம். இன்று கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினிகளை இந்த அரசு கொடுக்கப்போகிறது. ரொம்ப காலமாகவே நம்மை படிக்க வைக்கிறதுக்கு திட்டம் போட்டுக் கொண்டே இருக்கிறது. நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு கல்வியை கொடுப்பது எவ்வளவு அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலமாக அந்த தலைமுறை, அந்த குடும்பம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து போறாங்க.
அதுக்கு முக்கியமான பங்கை இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாங்க. அதற்கு முதல்வருக்கு நன்றி. ஒருவரின் வளர்ச்சி என்பது, அவருக்கு கிடைக்கும் அறிவின் மூலமாகத்தான் முன்னேறி போக முடியும். அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவர்களை முன்னாடி நகர்த்திக் கொண்டு போவதில் பெரும் பங்கு வகிக்கிறாங்க. அதற்கு முதல்வருக்கு ரொம்ப நன்றி. இந்த திட்டத்தில் பயன் அடையப்போகும் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
