சென்னை: சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபில் கிரிகெட் போட்டிகள் நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தேர்தல் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று அவர் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னர் வழக்கமான நடைமுறையின்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். போட்டிகள் நடத்தப்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி எழுப்பினர்.
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
- ஐபிஎல் கிரிக்கெட்
- உயர்
- சேப்பாக்கம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஐபிஎல்
- பிரபாகரன்
- Thiruvallikeni
- சென்னை உயர்நீதிமன்றம்…
