காந்தி மியூசியத்தில் கவியரங்கம்

மதுரை, ஜன. 5: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புத்தாண்டே வருக என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. ஆய்வாளர் பேராசிரியர் தேவதாஸ் தலைமை வகித்தார். மியூசிய செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் வாழ்த்துரை வழங்கினார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு குறித்து பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 

Related Stories: