திருப்பூர்: உப்பாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து இன்று முதல் ஜனவரி.23 வரை 11 நாட்களுக்கு 173 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. தண்ணீர் திறப்பால் தாராபுரம் வட்டத்தில் உள்ள 6060 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அரசு அறிவித்தது.
