திருப்பரங்குன்றம் தொடர்பான ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவப் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை : திருப்பரங்குன்றம் தொடர்பான ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவப் பேச்சுக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”தமிழர்களை முட்டாள், திருடர்கள் என்று வசைபாடும் வடநாட்டுத் தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். மதக் கலவரத்தை தூண்டி, தேர்தலில் வாக்கு வங்கியாக மாற்றலாம் என பாஜக கனவு காண்கிறது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுப்போர் முட்டாள்கள் என்று ஒன்றிய அமைச்சர் பேசியது கண்டனத்துக்குரியது”, இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: