சென்னை: சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதியில் நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுகள் தொடங்கும் தேதியை தற்போது சிபிஎஸ்இ மாற்றி அறிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு மார்ச் 3ம் தேதி நடக்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதியும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10ம் தேதியும் நடக்கும். பிற அனைத்து தேர்வுத் தேதிகளும் மாற்றம் இன்றி அப்படியே குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும். தேர்வு அட்டவணைகள் அதற்கேற்ப திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட தேதிகள் ஹால்டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்படும்.
