புத்தாண்டையொட்டி ஒரே நாளில் மல்லிகை விலை பன்மடங்கு உயர்வு: கிலோ ரூ.2,500க்கு விற்பனை

மதுரை: புத்தாண்டையொட்டி ஒரே நாளில் மல்லிகை விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500 வரை விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு மற்றும் மல்லிகை விளைச்சல், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்ந்துள்ளது. நேற்று ரூ. 1800 விற்கப்பட்ட மல்லிகை இன்று ஒரே நாளில் ரூ.2,500 ஆக விலை உயர்ந்திருக்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தையில் மல்லிகை விலை கிலோ ரூ.3,000 உயர்ந்திருக்கிறது. புத்தாண்டு பண்டிகை மதுரை மல்லிகை பூ விளைச்சல் குறைவு காரணமாக மதுரை மற்றும் தேனி மலர் சந்தைகளில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக புத்தாண்டு பண்டிகை நாளை வர இருக்கிறது. அதைபோல் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதன் காரணமாக மல்லிகை விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து என்பது வெகுவாக குறைந்திருக்கிறது. மதுரை மலர் சந்தையில் இருந்து தான் தென்மாவட்டத்துடைய பல்வேறு பகுதிகளுக்கும் பூ வியாபாரிகள் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள். அந்த வகையில் நேற்று வரை ரூ.1,800 விற்கப்பட்ட மதுரை மல்லிகை பூ கிட்டத்தட்ட ரூ. 2,500 முதல் ரூ. 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ நேரடியாகவே ரூ. 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் மாற்ற பூக்களின் விலையும் ரூ . 50 முதல் ரூ. 200வரை அதிகரித்திருக்கிறது. கனகமரம் ரூ. 2500க்கும், பிச்சிப்பூ ரூ.1300க்கும், முல்லை பூ ரூ. 1200க்கும், செவ்வந்தி ரூ.120க்கும், ரோஸ் வகைகள் ரூ. 200க்கும் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் விளைச்சல் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: