பெய்ரூட்: சிரியாவின் ஹோம்ஸ் நகரில் நேற்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இமாம் அலி இப்னு அபி தாலிப் மசூதியில் பயங்கர குண்டு ெவடிப்பு நடந்தது. இதில் 6 பேர் பலியானார்கள். 21 பேர் காயமடைந்தனர். மசூதியின் தரைவிரிப்புகளில் ரத்தம், சுவர்களில் துளைகள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் தீயினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
