ரஷ்ய ராணுவ விமானம் மலையில் மோதி நொறுங்கியது: 29 பேர் பலி

சிம்பெரோபோல்: ரஷ்யாவில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 பேரும் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான ஏஎன்-26 ரக ராணுவ போக்குவரத்து விமானம், நேற்று முன்தினம் திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடங்கியது. விமானம் கிரிமியா வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கிரிமியா பகுதியில் உள்ள செங்குத்தான மலைச்சரிவில் விமானம் மோதி நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 6 ஊழியர்கள் மற்றும் 23 பேர் என மொத்தம் 29 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமானத்தின் மீது வெளிப்புறத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. ஏவுகணைகளோ, ட்ரோன்களோ அல்லது பறவைகளோ மோதவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Stories: