×
Saravana Stores

தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல :கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திருவள்ளூர் : கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11ம் தேதி இயக்கப்பட்ட பாக்மதி விரைவு ரயில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானது. கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 40 ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் கவரைப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டிந்தது தெரியவந்துள்ளது. நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. பாக்மதி விரைவு ரயில் விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதுமின்றி தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் இதுவரை ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் என 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் விசாரணையில்,”பாகமதி விரைவு ரயிலுக்கு முன்பாக சூலூர்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் மூன்று நிமிடத்திற்கு முன்பு சென்றுள்ளது. மூன்று நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை சுழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது .தண்டவாள பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் மூலம் போல்ட், நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடங்களானது.சூளூர்பேட்டை ரயில் சென்ற பிறகு மூன்று நிமிட இடைவெளிக்குள் போல்ட் நட்டுகளை முழுமையாக கழற்றி இருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறு சிறுப் பகுதியாக கழற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சூளூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக கழற்றி விடும்போது தான் பாகமதி ரயில் விபத்தில் சிக்கி உள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது. தண்டவாளத்தின் போல்ட், நட்டுகளை முழுமையாக கழற்றிய பிறகுதான் பச்சையிலிருந்து சிக்னல் சிவப்புக்கு மாறுகிறது. ஒரு பகுதி போல்டை நட்டை கழற்றும் பொழுது சிக்னல் மாறும் தொழில்நுட்பம் இல்லை என்பது ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. கவரைப்பேட்டை விபத்துக்கு முன்பு பொன்னேரியில் 3 முறை தண்டவாளத்தின் பாகங்கள் கழன்று கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியரோ, துறையில் பயிற்சிபெற்ற நபர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல :கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kavarippet train ,Thiruvallur ,Kawaripettai ,Mysore ,Darbhanga ,Bihar ,Kavaripettai ,Ponneri ,Dinakaran ,
× RELATED கவரைப்பேட்டையில் ரயில் விபத்து.....