×
Saravana Stores

சித்தியை தாக்கிய வாலிபர் கைது

 

தர்மபுரி, அக்.14: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது 2வது மனைவி சின்னப்பொண்ணு(50). இவர் கடந்த 4ம் தேதி, வீட்டின் முன்புள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சின்னபையனின் மூத்த மனைவி மகன் மாதேஷ்(39) என்பவர், சின்னபொண்ணுவை பார்த்து, ஏன் இங்கு வந்து தண்ணீர் பிடிக்கிறாய் என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த மாதேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து, சின்னபொண்ணுவை சரமாரியாக தாக்கினார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாதேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சித்தியை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Siddhi ,Dharmapuri ,Chinnabaiyan ,Mottur village ,Nallampally ,Dharmapuri district ,Chinnapponnu ,Dinakaran ,
× RELATED குறை தீர் முகாமில் 75 மனுக்களுக்கு தீர்வு