×
Saravana Stores

ஏழூர்பட்டியில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

 

தொட்டியம் , அக், 19: தொட்டியம் ஏழூர்பட்டியில் பூட்டி இருந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏலூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் விமல்ராஜ் (45). ஏழூர்பட்டி சேலம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

காலையில் கடையை திறப்பதற்கு விமல் ராஜ் வந்து பார்த்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் சாத்தி இருந்தது. மீண்டும் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அரிசி மூட்டைகள்,மற்றும் சோளம் வாங்குவதற்காக கடையில் வைத்திருந்த ரொக்க பணம் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

The post ஏழூர்பட்டியில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sevurpatty ,Tutiam ,Sekhar Son ,Elur Patti ,Thotiam, Trichy District ,Dinakaran ,
× RELATED தென்னூரில் 8,000 அழுகிய முட்டைகளை பயன்படுத்திய 2 பேக்கரிகளுக்கு ‘சீல்’