×
Saravana Stores

மன்னார்குடி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து தொடர் திருட்டு

 

மன்னார்குடி, அக். 19: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட கீழத்திருப்பாலக்குடி வாழ் முனீஸ்வரன், மேலத்திருப்பாலக்குடி மதுரை வீரன் ஆகிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றனர். இது குறித்து பரவாக் கோட்டை காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இன்ஸ்பெக்டர் சசிகலா, எஸ்ஐ பிரேம் ஆனந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆலங்கோட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த முத்து (22), அஜீத் (20), பைங்காநாடு பாரதி தெரு ராஜேஷ் (26), பொதக்குடி மேலவாழச்சேரி பிரபாகரன் (30) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து பரவாக்கோட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடியதை நால்வரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ 40 ஆயி ரம் ரொக்க பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை கைப்பற்றினர்.

The post மன்னார்குடி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து தொடர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Thiruvarur district ,Paravakkottai ,Keethiruppalakudi ,Jiha Muneeswaran ,Melathiruppalakudi ,Madurai Veeran ,
× RELATED காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும்...