×

அதிமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடி குடும்ப நல நிதியுதவி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மே’ தினத்தை முன்னிட்டு, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்குவது, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் வழங்கப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்ளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் 1 கோடியே 71 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். இவர்களுக்கு வருகிற 17ம் தேதி காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்.

The post அதிமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடி குடும்ப நல நிதியுதவி: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருவமழை தொடங்கும் முன்னரே மழைநீர்...