×

விபத்து ஏற்படாவண்ணம் பட்டாசு தொழிலாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பாண்டியன் நகரில், குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது. ஆழ்ந்த இரங்கல்கள். இந்த வெடி விபத்தினால் ஒரு வீடு தரைமட்டமான நிலையில், எதிர்புறமாக இருந்த 20 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு மளிகைக் கடையும் முற்றிலும் சேதமுற்றுள்ளது. தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக் கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். தமிழக அரசு உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

The post விபத்து ஏற்படாவண்ணம் பட்டாசு தொழிலாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,CHENNAI ,Tamil State Congress ,President ,GK Vasan ,Tirupur ,Pandyan Nagar ,Dinakaran ,
× RELATED சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன், டிடிவி வலியுறுத்தல்