×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை தாங்கினார்.

செயற்பொறியாளர் கனகராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர்கள் சற்குணன், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர், உதவி செய்ய பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Electricity Board ,Periyakuppam, Thiruvallur ,Shekhar ,Thiruvallur Power Distribution ,Executive ,Kanagarajan ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை...