×

தவறை சுட்டி காட்டினால் திருத்தி கொள்கிறேன் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் குமரன் திருநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீதி வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன், உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வேன் என்று கூறினார். தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என் மீது பணமோசடி, லஞ்ச புகார் போன்ற எதுவும் பதிவானதில்லை. வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் என்பது போன்ற குற்றசாட்டுகள் ஏதும் இல்லை. அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஒருவேளை ஏதேனும் நான் தவறு செய்திருந்தால், அதை என்னிடம் எடுத்து கூறி சுட்டிக்காட்டினால் அந்த தவறை திருத்தி கொள்வதாக கூறினார்.

நான் யார் குடியையும் கெடுத்ததில்லை, ஊரார் சொத்துக்கு ஆசைப்பட்டது இல்லை.. நானோ, என் பிள்ளைகளோ எந்த தவறும் செய்தது இல்லை. அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏதேனும் தவறு செய்து இருந்தால் என்னிடமே நேரடியாக சொல்லுங்கள், நான் திருத்தி கொள்கிறேன். எந்த தவறும் செய்யாத எங்களுக்கு, மக்களுக்கு உழைக்கும் எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு உங்களின் அனைவரது பாதங்களை தொட்டு வணங்கி கேட்டு கொள்கிறேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Tags : Dindigul Sinivasan ,Dindigul Sinivasan Kumaran ,Dindigul ,Thirunagar ,
× RELATED ரங்கசாமியை பொம்மை முதல்வராக...