சென்னை: திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருள் புழக்கம், அராஜகங்கள், வன்முறைகள், சட்ட விரோத செயல்கள் தொடர்கின்றன. எனவே திமுக அரசை கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து, வருவாய் மாவட்ட தலைநகரங்களில், வருகிற 17ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
