- டி.டிவி தீனகரன்
- அஇஅதிமுக
- சென்னை
- ராமநாதபுரம் மாவட்டம்
- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- தேவர் ஜெயந்தி விழா
- பசும்பொன்
- AMMK
- பொதுச்செயலர்
சென்னை: கடந்த 2018ல்பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவுக்காக அப்போதைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்று ராமநாதபுரம் மாவட்ட அதிமுக தரப்பில் 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தூண்டுதலின் பேரில், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி கமுதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் டிடிவி.தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, டிடிவி.தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக நீதிபதியிடம் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் சமரசம் செய்து கொண்டது தொடர்பாக இரு தரப்பினரும் இணைந்து மனு தாக்கல் செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட டிடிவி.தினகரன் மற்றும் புகார்தாரர் முனியசாமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி சமரசம் செய்ததை தெரிவிக்க வேண்டும். அதுவரை கமுதி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
