- தெமுத்திகா
- திமுகா கூட்டணி
- சென்னை
- தெமுட்டிகா
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- அண்ணா எர்வாலயா
- தேமுதிக
- தெமுட்டிகா
- திமுக் டெமுட்டிகா
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆனது. தேமுதிக வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றது. தேமுதிகவின் 15 ஆண்டு கனவு நிறைவேறியது. திமுக-தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி சட்டமன்ற இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று (03-03-2026) கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும்; இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
