- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சிறப்பு உயர் திறன் மையம்
- ஓமந்தூரர் ஹாஸ்பிடல்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (3.3.2026) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 9.00 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, விளையாட்டு போட்டி மற்றும் பயிற்சியின்போது காயப்படுகின்ற வீரர்களை முழுவதுமாக சரிசெய்து முன்பைவிட அதிக வலிமை மற்றும் மேம்பட்ட திறனுடன் மீண்டும் விளையாட்டு களத்திற்கு செல்வதற்கான விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையின் சிறப்பு உயர் திறன் மையத்தை (Centre of Excellence) திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு காயம் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நுண்துளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிரிவில் ஆண்டிற்கு சராசரியாக 3,000 விளையாட்டு வீர்கள் வரை அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை பரிசோதித்து, அவற்றில் சுமார் 300 நுண்துளை அறுவை சிகிச்சைகளும், மற்றவர்களுக்கு புனர்வாழ்வு ஆலோசனைகளும் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டால் ஏற்படும் காயங்களுக்கான குருத்தணுக்கள் சிகிச்சை, PRP (Platelet Rich Plasma) மற்றும் Intra articular Injection அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னும், அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு காய பிரிவினை சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் CoESMAS (Centre of Excellence Sports Medicine and Arthroscopy) என்ற சிறப்பு உயர் திறன் மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கிராமப்புற, நகர்ப்புற, மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சர்வதேச தரத்திற்கு இணையாக உடலியங்கியல் உடற்பயிற்சி, விளையாட்டு உளவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உயர் செயல்திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன அறிவியல் முறைகளை கொண்டு 3D Gait Lab with IR cameras, Force Plat போன்ற பல்வேறு கருவிகளை உபயோகப்படுத்தி விளையாட்டு அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் ஆய்வகம் மூலம் விளையாட்டு வீரர்களின் காயத்தை முழுவதுமாக பரிசோதித்து நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு சர்வதேச தரம் கொண்ட OT High-end table, Multipara Monitor போன்ற கருவிகளை பயன்படுத்தி காயப்பட்ட வீரர்களை முழுவதுமாக சரிசெய்து முன்பைவிட அதிக வலிமையுடன் மற்றும் மேம்பட்ட திறனுடன் மீண்டும் விளையாட்டு களத்திற்கு செல்வதற்கு இந்த மையம் சிறப்பு உயர்திறன் மையமாக (Centre of Excellence) மேம்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையத்தில், தலா ஒரு பேராசிரியர், உதவி பேராசிரியர், மருத்துவ அலுவலர், உடலியங்கியல் உடற்பயிற்சியாளர், உயிரியக்கவியல் நிபுணர், விளையாட்டு உயிரி எந்திரவியல் நிபுணர் மற்றும் 2 உடற்பயிற்சி பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஏற்படும் தோள்பட்டை தசைநார் கிழிதல், முழங்கை மூட்டு தசைநார் கிழிதல், மணிக்கட்டு தசைநார் கிழிதல், கணுக்கால தசைநார் கிழிதல், சுளுக்கு போன்ற அனைத்து காயங்களையும் பரிசோதித்து சரிசெய்யப்படுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு விளையாடுவதற்கு முன்னும், பின்னுமான தகுதி பரிசோதனை (Iso Kinetic, High Performance Training, CPET, Vertec device, Response Timer, Timing Gates) மூலம் கண்டறிய சர்வதேச தரத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மையத்தால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள SDAT விளையாட்டு வீரர்கள், கிராமப்புற, நகர்ப்புற, மற்றும் தேசிய அளவிலான தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பெற்று உடனடியாக அவர்கள் மீண்டும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
