×

சொன்னாரு..! செஞ்சாரு..!! ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ 21.70 லட்சம் பயனாளிகள்

சொன்னாரு: ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: தமிழ்நாட்டில் உள்ள வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்றாக, ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ உள்ளது. விளிம்புநிலை மக்களின் தேவைகளை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய திட்டம்.

ஏனென்றால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை (அரிசி, சர்க்கரை போன்றவை) வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்கு கூடுதல் செலவாக ரூ.30.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அரசின் உணவுப் பாதுகாப்பு துறையின் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கடைகளுக்கு சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ‘‘அரசு சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வது’’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

மேலும், இத்திட்டம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பயனாளிகளின் வசதி மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. இத்திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டம், ஏனெனில் இது வயதானவர்களின் தேவைகளை உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறது. பயனாளிகள் தங்கள் ரேஷன் அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு, அரசு ஊழியர்கள் வீடு தேடி சென்று பொருட்களை வழங்குகின்றனர். இத்திட்டத்தில் அரிசி, சர்க்கரை, கடலைப்பருப்பு / துவரம்பருப்பு, எண்ணெய், கோதுமை வழங்கப்படுகிறது.

இதற்காக ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் பதிவு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு 2,394 புதிய ரேஷன் கடைகளை திறந்துள்ளது, இது இத்திட்டத்தின் அமலாக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன.

* 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும் ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21.70 லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். தற்போது, இது அதிகரித்துள்ளது. இத்திட்டம் 34,809 ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

Tags : Sonnaru ,Sencharu ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu… ,
× RELATED எடப்பாடிக்கு பாடம் புகட்ட சசிகலா ரெடி; வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம்