டெல்லி: டெல்லி ஏ.ஐ. தாக்க மாநாட்டு ஏற்பாடுகளில் குளறுபடி என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் திறமையை எடுத்துக்காட்டுவதற்கு பதில் சீனத் தயாரிப்பை காட்சிப்படுத்தியதாக ராகுல் விமர்சனம் செய்துள்ளார். சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ரோபாட் நாயை பல்கலை. ஒன்று காட்சிப்படுத்தியுள்ளது. சொந்த மாணவர்கள் தயாரிப்பு போல காட்சிப்படுத்திய ரோபோட் நாயை சீனா தயாரித்தது அம்பலமானது. உலக அரங்கில் இந்தியாவை மோடி அரசு அவமானப்படுத்திவிட்டதாக ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
