×

கேரளாவில் பார்களில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க அனுமதி

 

திருவனந்தபுரம்: கேரளாவில் மது பார்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் மது விற்பனை நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை உயர்த்த வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து மது பார்களின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் உயர்த்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்யலாம். பீர், ஒயின் பார்களின் நேரமும் இதேபோல அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 நட்சத்திர பார்களில் அதிகாலை 3 மணி வரை மது சப்ளை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...