ஆசிரியர் தூண்டிலில் 21 கிலோ எடை மீன் சிக்கியது

சாத்தான்குளம்: மணப்பாடு கடலில் ஆசிரியர் பிடித்த தூண்டிலில் 21 கிலோ எடை உள்ள பாரை மீன் சிக்கியது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் போலையர்புரத்தைச் சேர்ந்த ஜெரோம்ஆசீர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி விடுமுறை காலங்களில் கடற்கரைக்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடிப்பது வழக்கம் .

அதன்படி நேற்று மணப்பாடுக்கு சென்று அங்குள்ள தூண்டில் பாலம் அருகில் தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளார். அப்போது 21 கிலோ எடை கொண்ட பாரை வகை மீன் சிக்கியுள்ளது. இதனை அவர் ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களுக்கு வழங்கினார். பாரை வகை மீன்  வியாபாரிகளிடம் கிலோ ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன் 21 கிலோ இருந்ததால் ரூ.10 ஆயிரம் இருக்கும் என மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: