ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்பேன்: டிடிவி உறுதி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: வரும் செப்டம்பரில் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பேன். ஓபிஎஸ்சுடன் இணைந்துதான் செயல்பட்டு வருகிறோம். இன்னும் ஆறு மாதங்களில் கூட்டணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை அடையும். தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது. இதேபோல் நாங்களும் திருமங்கலத்தில் ஆலோசனை நடத்தியுள்ளோம். தேஜ கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டோம். தற்போதும் அதே கூட்டணியில் உள்ளோம். எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக திகழும். அமித்ஷா நினைப்பதையே நானும் தெரிவிக்கிறேன். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்பேன்: டிடிவி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: