திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உள்ள கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஆகவே, போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் சென்னை வழியாக வந்த ஒரு ரயில், பாலக்காடு அருகே உள்ள ஒலவக்கோடு ரயில் நிலையத்தை வந்தது. அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.