திருச்சுழி: திருச்சுழியில் ஆக்கிரமிப்பை அகற்ற கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. சில தினங்களில் இந்த கோயிலில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோயில் பகுதியில் துப்புரவு பணியில் அச்சமுதாய மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் தனது பகுதியில் துப்புரவு பணியை மேற்கொள்ள கூடாது என தனியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு
