மதுரை மாநகராட்சி பில் கலெக்டர், உதவியாளர் கைது

மதுரை: மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், வருவாய் அலுவலர் செந்தில்குமரன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையில் வரி முறைகேட்டில் தொடர்புடைய மாநகராட்சி பில் கலெக்டர் ரவிச்சந்திரன் (50), அவரது உதவியாளர் ஜமால் (39) ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

The post மதுரை மாநகராட்சி பில் கலெக்டர், உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: