பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவி ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. முகாமில், 428 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், மண்டல அலுவலர் ரகு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசுலு கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் ஆர்முடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.