கோவை: கோவை ரெட்பீல்டில் விமான படை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் டெல்லியை சேர்ந்த 28 வயதான பெண் அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்தனர். காலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுத்த பெண் அதிகாரியை பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் (30) என்பவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்.