இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை


ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் மெல்சன், விசைப்படகு ஓட்டுநர்கள் ராபர்ட், பெக்கர் (எ) ஜான் பிரிட்டோ, ஜான்சன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் மீனவர் மெல்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, படகு ஓட்டுநர்களான ராபர்ட், பெக்கர்(எ) ஜான் பிரிட்டோ, ஜான்சன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நால்வரும் கொழும்பு வெளிக்கடை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் இந்திய துணை தூதரகம் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மரிய சூசைதாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராபர்ட், பெக்கர் (எ) ஜான் பிரிட்டோ, ஜான்சன் ஆகியோரை விடுதலை செய்த நீதிபதி, 2வது முறையாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர் மெல்சனின் தண்டனையை ரத்து செய்யமுடியாது என உத்தரவிட்டார். மீனவர்கள் விடுதலையானதால் ராமேஸ்வரம் தீவு மீனவ மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: