அரசு பஸ் மோதி ஆசிரியை பலி

திருக்கழுக்குன்றம்:கல்பாக்கம் அடுத்த அணுபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (50). பொன்பதர்கூடம் கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியை. நேற்று மாலை மஞ்சுளா தேவி, வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். பொன்பதர் கூடத்தில் இருந்து வேறொரு வாகனத்தில்  திருக்கழுக்குன்றம் வந்து இறங்கினார். அப்போது, பெங்களூருவில் இருந்து கல்பாக்கம் செல்லும் அரசு பஸ் வந்தது. அதில், செல்வதற்காக மஞ்சுளா தேவி எதிரே ஓடி வந்தார்.

அவரை, டிரைவர் கவனிக்காமல் பஸ்சை இயக்கியதில், பஸ் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், மஞ்சுளா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: