மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு: தொழில் முனைவோர் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வகையில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ”மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இதில் பொதுப்பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சென்னை, காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை எண் 2/601, கிழக்கு கடற்கரை சாலை, மீன்வளம் மற்றும் மீனவர் நல துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 24492719 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வரும் 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை www.fisheries.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: