கோடை விடுமுறைக்கு வரும் அறுவடை

சென்னை: ஆன்மிகம் தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி, நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும் என்பதுதான் ‘அறுவடை’ படத்தின் கதை.

இப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் எம். கார்த்திகேசன் தயாரித்துள்ளார். படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக நடித்தும் இருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘லாரா’ படத்தைத் தயாரித்திருந்தார் .அதில் அவர் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. ‘ஒண்டிமுனி’ என்கிற படத்திலும் வில்லனாக நடித்து கவனத்தைப் பெற்றவர்.

பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். படம் குறித்து கார்த்திகேசன் கூறும்போது, ‘‘இதில் கதாநாயகியாக நடித்துள்ள சிம்ரன் ராஜ் இப்படத்திற்குப் பிறகு கவனிக்கப்படுவார். நடிகர் கஜராஜ் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பருத்திவீரன் சரவணன் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார்.அவரது அனுபவம் நடிப்பில் தெரியும்படி காட்சிகள் அமைந்துள்ளன.இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. கோடை விடுமுறையை படம் வெளியாகும்’’ என்றார்.

Related Stories: