எனது வளர்ச்சிக்கு காரணம் தாவூத் இப்ராகிம்! அதிர வைத்த ராம் கோபால் வர்மா

மும்பை: சர்ச்சைக்குரிய கருத்துகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, மாஃபியாக்களை மையப்படுத்தி பல படங்களை இயக்கியுள்ளார். யாரை பற்றியும், எதை பற்றியும் சிறிதளவும் கவலைப்படாமல் பேசும் அவர், தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையுலக வாழ்க்கையில் எனது வெற்றிக்கு தாவூத் இப்ராகிம் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

அவரால் என் பிழைப்பு நடக்கிறது. அவர் இல்லை என்றால், என்னால் ‘சத்யா’, ‘கம்பெனி’ போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்க முடியாது. இந்த படங்கள் என்னை பாலிவுட்டில் தனியாக அடையாளப்படுத்தியது. இந்த படங்கள்தான் எனக்கு இப்போதும் வருமானம் கொடுத்து வருகிறது. தாவூத் இப்ராகிம் குறித்த கதைக் களங்களால் என் வாழ்க்கையும், பொருளாதார நிலையும் உயர்ந்தது. எனவே, எனது ‘Guns மற்றும் Thighs’ என்ற சுயசரிதையை முதலில் அவருக்கு அர்ப்பணித்தேன். வெளியீட்டாளர்கள் அந்த பெயரை நீக்கிவிட்டனர்.

1990களில் மற்ற இயக்குனர்களுக்கு நிழல் உலக தாதாக்களிடம் இருந்து மிரட்டல் வந்தபோது, எனக்கு ஒரு மிரட்டல் கூட வந்தது இல்லை. காரணம், நான் இயக்கிய படங்களை தாதாக்கள் நேசித்தனர். அவர்களின் வாழ்க்கையை திரையில் மனிதாபிமானத்துடன் காட்டியதால், அவர்கள் என்னை ஒரு ஆத்ம நண்பனாக பார்த்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். தாவூத் இப்ராகிமை ராம் கோபால் வர்மா பாராட்டி பேசியிருப்பதை அறிந்த நெட்டிசன்களும், ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: