டாப்ஸியை வேதனைப்படுத்திய ஆடை விவகாரம்

சமீபத்தில் டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், தென்னிந்திய படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த அசவுகரியமான விஷயம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘தென்னிந்திய திரைத்துறையில் கிளாமர் காட்சிகளுக்கும் மற்றும் பாடல் காட்சிகளுக்கும் என்னை எடுப்பான ஆடை அணிய சொன்னார்கள்.

அதை அணிந்தால் வேறுபாடுகள் தெளிவாக தெரியும். அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதால், அது எனக்கு மிகவும் அசவுகரியமாகவும், அவமானமாகவும் இருப்பதை உணர்ந்தேன். பாலிவுட்டை விட தென்னிந்திய படங்களில் கிளாமரை மட்டுமே அதிகமாக காண்பிக்கின்றனர். மேலும், இடுப்பு பகுதியை ஆபாசமாக காட்டுகின்றனர்’ என்று வேதனையுடன் பேசியுள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது.

Related Stories: