மேக்கப்பை புறக்கணிக்கும் சாரா அர்ஜூன்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜூனை எளிதில் மறந்துவிட முடியாது. கோர்ட் காட்சியில் அவரது அற்புதமான நடிப்பு கண்களை குளமாக்கியது. மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ என்ற படத்தில் நடித்த அவர் மும்பையில் வசித்து வந்த காரணத்தால், பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் வயது ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தார். தற்போது 20 வயதாகும் சாரா அர்ஜூன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தியில் வெளியான ‘துரந்தர்’ என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், அவரது அழகை பராமரிக்க என்னென்ன அழகு பொருட்களை பயன்படுத்துகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாரா அர்ஜூன், ‘நான் பெரிய அளவில் மேக்கப் போட்டுக்கொள்ள மாட்டேன். எப்போதுமே அதை நான் விரும்புவது கிடையாது. இயற்கையான அழகைத்தான் பெரிதும் விரும்புவேன். திரைப்பட விழாவுக்கு சென்றாலும், லேசான ‘டச்சப்’ மட்டும் செய்துகொள்வேன். படப்பிடிப்பில், தேவைப்படும் பட்சத்தில் அதற்கான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவேன். அதுவும் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும். மற்றபடி மேக்கப்பை விரும்பாத பெண் நான். இப்படி நான் சொல்வதை கேட்டு பலர் ஆச்சரியப்படுகின்றனர். உண்மையைத்தானே சொல்கிறேன். இயல்பான அழகே போதும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

Related Stories: